பெங்களூரு:
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் மஜத கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, பா.ஜ.வின் எடியூரப்பா பதவியேற்றார். இதனையடுத்து இன்று கூடிய கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்றார்.