17 இடங்களிலும் வெல்வோம்

17 இடங்களிலும் வெல்வோம்

பெங்களூரு:

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 தொகுதிகளிலும் பா.ஜ., வெல்லும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் எனவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 17 எம்.எல்.ஏ.க்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். நாளை முதல் நாங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லப் போகிறோம். நாங்கள் 17 இடங்களையும் 101% வெல்லப்போகிறோம்.

மேலும், தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் பா.ஜ.,வில் சேருகிறார்களா? என்ற கேள்விக்கு, மாலை வரை காத்திருங்கள். 17 பேருடன் கலந்தாலோசித்துவிட்டு, தேசியத் தலைமையுடனான ஆலோசனைக்கு பின், மாலையில் தகுந்த முடிவை எடுப்போம் என எடியூரப்பா தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்