திருச்சி:
திருச்சியில் 3 வயது பெண் குழந்தை அம்பு எய்தலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
திருச்சி பொன்மலையில் வசித்துவரும் சகாய விஜய் ஆனந்த் – ஜெயலட்சுமி தம்பதியரின் மகள் ஆராதனா. 3 வயதே ஆன இந்த குழந்தை, சுமார் 10 மீட்டர் இடைவெளியில் இலக்கை நோக்கி 2 மணி நேரம் தொடர்ந்து அம்பு எய்தி சாதனை படைத்துள்ளார்.
இது எவரெஸ்ட் மற்றும் ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய ஆராதனாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.