உலகக்கோப்பை கிரிக்கெட்: 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

  • In Sports
  • May 31, 2019
  • 163 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!

லண்டன்:

உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் பாகிஸ்தான் அணி இன்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இமாம் உல்ஹக், ஜமான் களமிறங்கினர். நட்சத்திர வீரரான இமாம் உல் ஹக் இரண்டே ரன்களில் அவுட்டாகினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கி ஷாம் 22 ரன்களிலும், ஜமான் 22 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களே எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக 21.4 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களே எடுத்தது. மேற்கிந்திய அணியின் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், அணியின் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்