புதுடெல்லி:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டி, ஈரோட்டை சேர்ந்த ராதாமணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நாளை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.