திருவாரூர்:
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த அருணுக்கும், மைதிலிலுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
அப்போது முதல் மைதிலியை வரதட்சணை கேட்டு கணவர் அருண், மாமனார், மாமியார் உட்பட பலர் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மைதிலி இன்று அதிகாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மைதிலி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்று போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.