ஆம்புலன்ஸில் பிரசவம்

ஆம்புலன்ஸில் பிரசவம்

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொழுமலை கிராமத்தில் வசிப்பவர் கஞ்சப்பா. இவரின் 19 வயது மகளான நேத்ராவுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.

பின்னர், மருத்துவ உதவியாளர். ஜெகன் மற்றும் ஓட்டுநர். குமார் விரைந்து சென்று தொழுமலை கிராமத்திலிருந்து கர்ப்பிணியுடன் புறப்பட்ட ஆம்புலன்சில், காட்டுப்பகுதியில் வரும்போது 12.05 மணிளவில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் ஆனது.

நேத்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உன்னிச்செடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்