ஐதராபாத்:
சர்வதேச விமானம் ஒன்று, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் இந்தியாவை கடந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அவசரமாக கருதி, உடடினயாக தரையிறக்க அனுமதி கோரினர்.
இதனையடுத்து, அந்த விமானம் ஆந்திராவின் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் வைத்தே பிரசவம் பார்த்தனர்.
அப்போது பாதுகாப்பு கருதி அறுவை சிகிச்சை கத்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்க முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேறு முறையில் தொப்புள் கொடி அறுக்கப்பட்டது. பிரசவம் நல்லபடியாக நடந்தாலும் தாயும், சேயும் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது.