தற்கொலைக்கு முயன்ற பெண் காவலருக்கு ‘டும்டும்டும்’

தற்கொலைக்கு முயன்ற பெண் காவலருக்கு ‘டும்டும்டும்’

ஒசூர்:

போலீஸ் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண் காவலருக்கு, போலீசார் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்த உறவினர்களான கண்ணன் – நதியா இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், நதியாவை திருமணம் செய்து கொள்ள கண்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது.

தான் ஏமாந்துவிட்டதாக புலம்பிய நதியா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார், உடனடியாக மீட்கப்பட்ட அவர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் காவலர் கண்ணனை அழைத்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்க்கொண்ட பின்பாக கண்ணன் நதியாவுடன் சேர்ந்து வாழ சம்மதித்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், காதலர்களான இரண்டு காவலர்களும் தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம சுவாமிக்கோவிலில் மனமுடித்துள்ளனர்.

காதலன் ஏமாற்றியதாக தற்கொலைக்கு முயன்ற நதியா சாவின் விழிம்புவரை சென்று, மீண்டும் காதலனையே கரம் பிடித்துள்ளார்.

நதியா திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்