பெண் கொலை; கள்ளக்காதலன் கைது

பெண் கொலை; கள்ளக்காதலன் கைது

ஒசூர்:

தகாத உறவால் பெண் கொலையில், இரண்டரை மாதங்களுக்கு பிறகு சிறுவனின் பேச்சால் கள்ளக்காதலன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாநில எல்லை அருகே கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட ஆனேக்கல் அடுத்த சென்னராயணபாள்யா கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் – சுமலதா(23) தம்பதிகள் இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளான நிலையில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

ஓட்டுநரான தேவராஜ் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிட எதிர்வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தூரத்து உறவினரான வெங்கடேஷ் கடைக்கு செல்வது, வாகனங்களில் அழைத்து செல்வதென உதவி செய்து வந்தநிலையில் வெங்கடேஷ், சுமலாதவிற்கிடையே நெருக்கம் ஏற்ப்பட்டு அதன்பின்பாக கள்ளக்காதலாக மாறி உள்ளது.

கிராமத்தில் இந்த விவகாரம் கிசுகிசுத்த நிலையில், கணவன் தேவராஜ் ஊர் பெரியோரை அழைத்து பஞ்சாயத்து மூலமாக வெங்கடேஷ் என்பவரை ஊரில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

இந்த பிரச்சனை முடிந்துவிட கணவர் தேவராஜிற்கும் ராதா என்கிற பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த சுமலதா, கணவரை எதிர்த்து மீண்டும் வெங்கடேஷ் உடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சுமலதாவிற்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்ப்பட்டு வந்தநிலையில், சம்பவம் நடைப்பெற்ற அன்று (18.09.2019) கணவருக்கு தொலைபேசி மூலமாக நெஞ்சு அதிகமாக வலிக்கிறது என தெரிவித்துள்ளார் அன்று இரவு கணவன் வராததால் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்று விடலாம் என அழைத்துள்ளார், வர மறுத்த சுமலதாவிற்கும் கள்ளக்காதலனுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட ஆத்திரமடைந்ந கள்ளக்காதலன் வெங்கடேஷ் குழந்தையை தூங்க வைக்கும் தொட்டில் சேலையால் சுபலதாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார், 6 வயது சிறுவனை தாயிடம் படுக்குமாறு படுக்கவைத்து வெங்கடேஷ் தலைமறைவாகி உள்ளார். நெஞ்சுவலியால் சுமலதா உயிரிழந்திருக்கலாம் என அடக்கம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், இரண்டரை மாதங்கள் கழித்து விளையாடி வந்த 6 வயது சிறுவன் ரவி, தன்னுடைய தாயை துணியால் இறுக்கி வெங்கடேஷ் கொலை செய்ததாக கூறி உள்ளார்.

உயிரிழந்த சுமலதாவினெ தாயாருக்கு தெரியவர அதிர்ச்சியடைந்து, ஆனேக்கல் போலிசில் புகாரளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட சுமலதா உடல் இரண்டரை மாதங்கள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர், பின்னர் தலைமறைவாகி இருந்த வெங்கடேஷை போலிசார் கைது செய்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற மறுத்த கள்ளக்காதலியை கொலை செய்து ஒன்று தெரியாதது போல் இருந்த நிலையில் 6 வயது சிறிவனால் கொலையாளி சிக்கிய சம்பவம் ஆனேக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்