அரை நிர்வாணத்தில் இளம்பெண் உடல்

அரை நிர்வாணத்தில் இளம்பெண் உடல்

வேலூர்:

வேலூர் கழிவுநீர் கால்வாய் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் நேற்று நடந்து சென்றபோது, கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், வேலூருக்கு வந்து காணாமல் போன வடமாநில பெண்களின் பட்டியலை வைத்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டள்ளதாகவும்ம போலீசார் தெரிவித்தனர்.

மேலும, பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டுள்ளதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்