டெல்லி:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று ‘பக்ரீத்’ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
பக்ரீத் பண்டிகையை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பக்ரீத் பண்டிகை அமைதி மகிழ்ச்சியை சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.