சென்னை:
சென்னையில் ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் பற்றி புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸப் எண் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ‘ரூட் தல’ பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் சாலையில் அரிவாளால் தாக்கி மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக மாணவர்களை கைது செய்த போலீசார் மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டு, இனி ‘ரூட் தலா’ என்ற பெயரில் பிரச்சனையில் ஈடுபடமாட்டோம் என போலீசாரிடம் உறுதிமொழி அளித்தனர்.
இந்நிலையில், ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் பற்றி 9087552233 என்ற வாட்ஸப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும், http://www.facebook.com/chennaipolice , https://www.twitter.com/chennaipolice என்ற சமூக வலைதளங்களிலும் புகார் அளிக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.