வாட்ஸ்அப் செயலியில் 5 முறைக்கு மேல் பார்வர்டு செய்யப்படும் தகவல்களை கண்டறிய புதிய அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மூலம் அதிக வதந்திகள் பரவி வருவதாக புகார்கள் தெரவிக்கப்பட்டன. இதனால் வாட்ஸ் அப் நிறுவனத்தின் செயலியில் புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டில், அடிக்கடி பார்வர்டு செய்யப்படும் மெசேஜ் பிரிக்வென்ட்லி பார்வர்டு என தெரிவிக்கப்படும். இந்த அப்டேட் கடந்த மார்ச் மாதமே சோதனைஓட்டமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.