புதுடெல்லி:
பாகிஸ்தான் உளவாளிகளால் வாட்ஸ்அப் குழுக்களில் ராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவதை தவிர்க்க இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறுத்தலில், ராணுவ வீரர் ஒருவரின் வாட்ஸ் அப் எண், பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்படும் நபரால் வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பாகிஸ்தான் உளவாளிகளால் வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்படுவதை தவிர்க்க முன்பின் தெரியாத குழுவில் சேருவதை தவிர்க்கும் வகையில், வாட்ஸ் அப் பாதுகாப்பு செட்டிங்சை மாற்றம் செய்யும்படி ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.