ஒசூர்:
கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார் அப்பொழுது கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து பொது மக்களை சந்தித்தார்.
கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.பி., அசோக்குமார் ஆகியோர் முதல்வர் பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
சுமார் அரை மணி நேரம் கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் அனைவரும் சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.