ஆந்திர போலீசாருக்கு இனி வார விடுமுறை!

ஆந்திர போலீசாருக்கு இனி வார விடுமுறை!

விஜயவாடா:

ஆந்திர மாநில போலீசாருக்கு இனி வார விடுமுறை வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து பல அதிரடியான திட்டங்களை கொண்டுவந்து மக்களை அசத்திவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆந்திர போலீசாருக்கு வார விடுமுறை அளித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் எனவும், இதனால் 67,804 காவலர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்