4 மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில், 4 மாவட்டத்திற்கு கனமழை.. வானிலை மைய அறிவிப்பு.!!

4 மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில், 4 மாவட்டத்திற்கு கனமழை.. வானிலை மைய அறிவிப்பு.!!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 24 மணி நேரத்திற்கு ஈரோடு, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்