லடாக்:
லடாக் அருகே உள்ள விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை குவித்து வருகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து, வர்த்தகம், போக்குவரத்து, தூதரை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது.
இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் லடாக் அருகே அமைந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளமான ஸ்கார்டுவில் இன்று காலை முதல் ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் குவித்து வருகிறது. 3 ஹெர்குலிஸ் ரக விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எப்.17 ரக போர் விமானங்களை ஸ்கார்டு விமானப்படை தளத்துக்கு நகர்த்த பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.