சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆந்திரா மற்றும் தமிழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
கண்டலேறு அணையில் இருந்து தற்போது 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் 2,000 கனஅடி நீர் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.