ஒசூர்:
ஒசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிக்கள், வாக்கு எண்ணும் மையத்தில் முகவர் முன்னிலையில் அறைக்கு சீலிடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 184 வாக்குச்சாவடிகளில் நேற்று பதிவான வாக்குப்பெட்டிக்கள், தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
184 வாக்குப்பெட்டிக்கள் இரண்டு அறைகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆப்தாப் பேகம் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் சீலிட்டனர்,
அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தி அறைக்கு சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அறைக்கு சீலிடப்பட்டபோது ஒசூர் கோட்டாட்சியர்,போலிஸ் டிஎஸ்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.