சிவக்குமார் கைதுக்கு போராட்டம்

சிவக்குமார் கைதுக்கு போராட்டம்

பெங்களூரு:
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் பல்லாயிரக்கணக்கானோர் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

இதில் ஒக்கலிகா சங்க நிர்வாகிகள், தங்களது சமூகத் தலைவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் சிவக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பிரமாண்ட போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான ஒக்கலிகா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்