இமாச்சல்பிரதேசத்தில் 40 பேர் பலி..! ரஷ்ய அதிபர் இரங்கல்!!

இமாச்சல்பிரதேசத்தில் 40 பேர் பலி..! ரஷ்ய அதிபர் இரங்கல்!!

இமாச்சல்பிரதேச பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கும் ரஷ்ய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லு என்ற இடத்தில் நேற்று பேருந்து ஒன்று கவிழ்ந்து 44 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பேருந்து விபத்தில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த விபத்தில் பல குழந்தைகளும் இளைஞர்களும் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குடியரசுத்தலைவர் மற்றும் மோடிக்கு டுவிட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இமாச்சல்பிரதேச பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்