நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை:

சென்னை எழும்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜரானார்.

சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி இயங்கி வருகிறது. இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்பதால், வருமானவரித்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது.

ஆனால், விஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், விஷாலுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிந்தது.

இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு, நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்