அமித்ஷா பேரணியில் கல்வீச்சு..! மேற்கு வங்கத்தில் பதற்றம்..!!

அமித்ஷா பேரணியில் கல்வீச்சு..! மேற்கு வங்கத்தில் பதற்றம்..!!

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.,வுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல்கள் வலுத்துவரும் நிலையில், தற்போது அமித்ஷா பேரணியில் மோதல் கலவரம் ஏற்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்ட பா.ஜ.,வைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இதனால், திரிணாமூல் காங்கிரஸ் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பாஜ.,வினரின் பேனர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கிழித்து அகற்றினர்.

இதனைத்தொடர்ந்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நடைபெற்ற மெகா பேரிணியில் வன்முறை மற்றும் கல்வீச்சு நடந்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

மேற்கு வங்கம் முழுவதும் தற்போது பரபரப்பு நிலவிவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்