விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க சதி

விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க சதி

கோவை:
இலங்கை வழியாக தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தன்.

மற்ற 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் நடத்தியது போன்று தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கோயில்களில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த முஸ்லிம் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் அனைத்து கோயில் மற்றும் ஆள் நடமாட்டம் உள்ள இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்