விழுப்புரத்தில் லாரி மீது கார் மோதல்; ஓட்டுனர் பலி..!

விழுப்புரத்தில் லாரி மீது கார் மோதல்; ஓட்டுனர் பலி..!

விழுப்புரம்:

விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் பகுதியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்துக்குள்ளானது.

விழுப்புரம் திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் எல்லீஸ் சத்திரம் அருகே சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த வேகமாக வந்த கார் நிலைதடுமாறி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் பயணம் செய்த பெண் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமனுதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்