சென்னை:
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்களை நல்ல முறையில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.