சென்னை:
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்கின்றார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்த படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த படம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனை சந்தித்தபோது இது பற்றி அவரிடம் சொன்னேன்.
என்னுடைய நண்பர்கள் சிலர் பந்து பொறுக்கத்தான் விளையாட்டில் சேர்ப்பார்கள். அப்போது கிரிக்கெட்டின் அடிப்படை கூட முழுதாக எனக்குத் தெரியாது.
இந்த படத்தை பொறுத்தவரையில் முழுவதும் கிரிக்கெட்டை பொறுத்தது.
என் மீது அன்பு வைப்பவர்கள் யாரையும் இழக்க மாட்டேன். அது போன்ற ஒரு காட்சிக் கூட இப்படத்தில் இருக்காது.
அப்படி ஏதேனும் அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்பேன். அது சிறு குழந்தையாக இருந்தாலும் கூட என்றார்.