லண்டன்:
வங்கியில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட விஜய்மல்லய்யாவை, உலகக்கோப்பை கிரிக்கெட் மைதனாத்தில் திருடன் திருடன்னு மக்கள் கூக்குரல் எழுப்பி கூப்பிட்டனர்.
பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பியோடி விஜய் மல்லையா, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண நேற்று மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த இந்திய மக்கள் ‘‘சோர் ஹாய்’’ என இந்தியில் திருடன் திருடன் என்று கூக்குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனை கண்டுகொள்ளாமல் விஜய் மல்லையா மைதானத்திற்குள் சென்றார்.
இந்த சம்பவம் மைதானத்தில் இருந்தவர்களிடையே சற்று சலசலப்பு ஏற்பட்டது.
#WATCH London, England: Vijay Mallya says, "I am making sure my mother doesn't get hurt", as crowd shouts "Chor hai" while he leaves from the Oval after the match between India and Australia. pic.twitter.com/ft1nTm5m0i
— ANI (@ANI) June 9, 2019