அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய விஜய் ரசிகர்

அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய விஜய் ரசிகர்

சென்னை:
இன்றைய சமூதாயத்தில் தொடர்ந்து வன்முறை கலாச்சாரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அதே போன்று திரைப்படங்கள் உண்மைக்கு புறம்பான, ஆவேசம் அளிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பி வருகின்றது.

எந்த ஹீரோ டாப் என்ற போட்டியில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதல் வெடித்து வருகிறது.

சென்னை, புழல் அடுத்த காவாங்கரையில், இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும், ரோஷன் 34, என்பவர் தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இவர், ஜி.எஸ்.டி குறித்து பொய் பரப்புரை செய்து இளைஞர்களை மூளை சலவை செய்த நடிகர் விஜயின் ரசிகர்.

அவர் வீட்டருகே வசிப்பவர், உமாசங்கர் 32, என்பவர் அஜீத் ரசிகர். அவர் ரோஷனிடம், நடிகர் விஜய் குறித்து, கிண்டலாக பேசியும், தரக்குறைவாக விமர்சித்தும் வந்துள்ளார்.

நேற்று காலை 6:30 மணிக்கு, உமாசங்கர், வழக்கம் போல் நடிகர் விஜய் குறித்து, கிண்டலாக பேசியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோஷன், அரிவாளால் உமாசங்கரை வெட்டினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக தகவல் கிடைத்த போலீசார் ரோஷனை கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்