‘‘குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு’’ – அமைச்சர் வேலுமணி

‘‘குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு’’ – அமைச்சர் வேலுமணி

சென்னை:

சென்னையில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு பேசுகையில், சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் எனவும், எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லவில்லை, ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும். அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்