தமிழகத்துக்கு தண்ணீர்; ஆந்திர முதல்வர் உறுதி

தமிழகத்துக்கு தண்ணீர்; ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை:

தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதற்கு ஆந்திர முதல்வர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார் தெரிவித்தனர்.

ஆந்திர முதல்வரை சந்தித்த பின், சென்னை விமானநிலையத்துக்கு வந்த அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஆந்திராவில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழக நீரின் பங்கை ஸ்ரீசைலமிலிருந்து விடுவிக்குமாறு ஆந்திர மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் விடப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். இந்த நீர் சென்னைக்கு பயன்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்