வேலூர் லோக்சபா தேர்தல்.. ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் லோக்சபா தேர்தல்.. ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர்:
வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியது.
6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி, தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஏ.சி.சண்முகம் 21,449 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக கதிர் ஆனந்த் 20623 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்