வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று மதியம் 98.1 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில் மாலை 4 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது.
காட்பாடி, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வாலாஜா, அம்முண்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.