சென்னை:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வி.பி.சந்திரசேகர் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்பதற்கு மிகவும் வருத்தமாகவுள்ளது.
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.