வனிதாவிற்கு மற்றுமொரு திருமணமா?

வனிதாவிற்கு மற்றுமொரு திருமணமா?

தமிழில் விஜயுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரண்டு படங்களும் மிகப் பெரிய அளவு வெற்றி பெறாததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் வனிதா விஜயகுமார். 2000 ஆண்டு நடிகரான ஆகாஷ் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பிறகு அதன்பிறகு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.
2017ஆம் ஆண்டு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. தொடர்ந்து நடன இயக்குனரான ராபர்ட் உடன் திருமணம் நடைபெற்றதாக பல்வேறு இடங்களில் கிசுகிசுக்கப்பட்டாளும் அதிகாரபூர்வமாக இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.ஆனால் நடன இயக்குநர் ராபர்ட் வனிதாவின் பெயரை அவரது கையில் பச்சை குத்திக் கொண்ட நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி விட்டு பிரிந்து விட்டார்கள். தற்போது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்.

வனிதா விஜயகுமார் – ஆகாஷ்
இவர்களது திருமணம் வரும் ஜூன் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. கரோனா சூழலால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் தான் இருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவாலும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணம் பற்றி வனிதா விஜயகுமார் தெரிவித்திருப்பது , வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு ஒரு சூழல் கடந்து இருக்கும். எனக்கு என் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அனைத்திலிருந்தும் மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உண்மையான ஒரு அன்பு ஒரு கட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

வனிதா விஜயகுமார் – ஆனந்த் ஜெய்ராஜன்
அப்படி எனக்கு கிடைத்த ஒரு உண்மையான அன்பு பீட்டர் பால். 40 வயதை நெருங்கும் நான் இந்த மூன்றாவது திருமணத்தின் முடிவை நிறைய யோசித்து தான் எடுத்து இருக்கிறேன். இந்த முறை இந்த முடிவானது நான் மட்டுமே எடுக்காமல் எனது குழந்தைகளிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனது குழந்தைகளிடம் வருங்கால கணவர் இந்த திருமணம் குறித்து பேசியிருக்கிறார். தன் தாய்க்கு ஒரு துணை வேண்டும் என்பதில் குழந்தைகள் அனைவருமே உறுதியான முடிவாகச் சொன்னதால் இந்த திருமணம் அவர்களுடைய சம்மதத்துடனும் நடைபெற இருக்கிறது. பீட்டர் பால் தமிழ் சினிமாவில் ஒரு இண்டிபெண்டன்ட் பிலிம் மேக்கராக இருக்கிறார். இந்த ஊரடங்கு காலத்தில் நிறைய யோசிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொண்ட பிறகு தான் இந்த திருமண முடிவை எடுத்திருக்கிறாராம் வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார் – ராபர்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வனிதா விஜயகுமார் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த யூடியூப் சேனல் நிகழ்ச்சி தயாரிப்பின் போது பீட்டர் பால் அறிமுகமாகியிருக்கிறார். இவர்களுக்கு இடையேயான நட்பு தற்போது திருமணத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தன் வாழ்க்கையில் எத்தனையோ கசப்பான அனுபவங்களை சந்தித்து விட்டார் வனிதா விஜயகுமார். பீட்டர் பாலின் அன்பு இனிவரும் நாட்களில் உற்ற துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தெரிவித்திருக்கிறார் வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமாரின் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

வனிதா விஜயகுமார் – பீட்டர் பால்
திருமண நிகழ்வு நடைபெற்ற பெற்றனர் புகைப்படங்களை மீடியாவிற்கு நாங்களே அனுப்பி விடுகிறோம் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.மறுமணம் என்றாலே அதில் பல குறைகளோடு பார்த்துக்கொண்டிருக்கும் சமுதாயத்தில் மூன்றாவது திருமணத்தின் முடிவை தன் குழந்தைகளோடு சேர்த்து எடுத்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு அவருடைய இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்