கோவை:
தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளதாக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்பே கூட மாநில தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவுகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி பணிகளில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை என்றும், மாநில தலைவரை தேர்வு செய்யும் பட்டியலில் 15 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.