விபத்தில் சிக்கிய சிறுவன்: ஒரு மணி நேரம் போராடி மீட்பு!

விபத்தில் சிக்கிய சிறுவன்: ஒரு மணி நேரம் போராடி மீட்பு!

செங்கம்:

செங்கம் அருகே விபத்தில், வேனுக்கு அடியில் சிக்கிய 10 வயது சிறுவனை ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.

செங்கம் வழியாக வேலூருக்கு சென்ற சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த ஏழுமலை குடும்பத்தினர் 19 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆனால், 10 வயது சிறுவன் மட்டும் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டான். அவனை தீயணைப்புப்படையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்