சென்னை:
அமெரிக்காவில் பிரதமர் மோடி ஐநா சபையில் உரையாற்றினார். அப்போது அவர் உலகத்தில் பல்வேறு நாடுகள் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான்.
உலகின் மூத்த மொழி தமிழ் ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று புலவர் கணியன் பூங்குன்றனார் தெரிவித்துள்ளார் என்று பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஐநா சபையில் தமிழில் பேசியதற்காக, வைரமுத்து ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது:
ஐநா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே.. ‘தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே’ என்று குறிப்பிட்டுள்ளார்.