புதுடெல்லி:
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
அவர் பதவியேற்கும்போது, ‘இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்’ என தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இவருடன் திமுக எம்பிக்கள் சண்முகம் மற்றும் வில்சன், அதிமுகவில் இருந்து முகம்மது ஜான், சந்திரசேகர் பதவியேற்றுக்கொண்டனர்.