சென்னை:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவேற்க உள்ளார்.
வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக தலைவர் வைகோ, பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, பா.ஜ., தமிழகத்தில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என தெரிவித்துள்ளார்.