பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க மனு

பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க மனு

புதுடெல்லி:

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடக்கக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள அந்த மனுவி, சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இதனைத்தொடர்ந்து, பரூக் அப்துல்லாவை தொடர்புகொள்ள முற்பட்டபோது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும், கண்டுபிடித்து தர வேண்டும் என எம்பி., வைகோ மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டபோது, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும் வீட்டு சிறையில் வைக்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்