மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு..!

மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு..!

சென்னை:

மாநிலங்களவை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பின்னர் நிறுத்திவைத்தது.

வைகோவுக்கு திமுகவில் மாநிலங்களவைக்கு சீட் ஒதுக்கிய நிலையில், அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த தீர்ப்பு சப்பந்தமாக மாநிலங்களவை மனு நிராகரிக்கப்படலாம் எனவும், அவருக்கு மாற்றாக திமுக தரப்பில் இளங்கோ மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவை வேட்பாளர் மனு மீதான பரிசீலனை நடந்தது. இதில் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வைகோவின் மனு ஏற்பால் 11ம் தேதி தனது வேட்புமனுவை திமுகவின் என்.ஆர்.இளங்கோ திரும்பப் பெறுகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்