சென்னை:
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசை குறை சொல்வதா? என மதிமுக தலைவர் வைகோவுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் நான் எம்.பி ஆகவில்லை என ஆவேசமாக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன்.
ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதியால்தான்.
காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் அழகிரி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.