ஷங்கருக்கு கிராபிக்ஸ் மட்டும்தான் தெரியும்.. வடிவேலு கிண்டல்.!

  • In Cinema
  • June 4, 2019
  • 258 Views
ஷங்கருக்கு கிராபிக்ஸ் மட்டும்தான் தெரியும்.. வடிவேலு கிண்டல்.!

தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார் வைகைப்புயல் வடிவேலு. காமெடிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே சேர்த்து வைத்துள்ளார்.

இன்றைய தலைமுறையினர் மீம்ஸ் போடுவதற்கு அதிகம் பயன்படுத்துபவர் பட்டியலில் வடிவேலு மட்டுமே உள்ளார். கடந்த வாரம் நேசமணி என்று உலக அளவில் டிரெண்டாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இந்நிலையில், நேசமணி டிரெண்ட்டானதும் வடிவேலுவை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தனர். அப்போது பிரபல இணையதளத்திற்கு ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 24ம் புலிகேசி பற்றியுள் கிண்டலுடன் பேசியுள்ளார். சிம்புதேவனை பொறுத்தவரையில் படமே இயக்கத் தெரியாது.

நான்தான் 23ம் புலிகேசி படத்திற்கு கதை வடிவமைப்பை கொடுத்தேன். அதே போன்று 24ம் புலிகேசி படத்திற்காக ஒரு வரி கதையுடன் வந்த இயக்குனரிடம் மூன்று வேடங்கள், மற்றும் நகைச்சுவை காட்சிகள் பற்றி டிஸ்கஸ் செய்து அந்த படத்தை முழு வடிவிற்குக் கொண்டு வர தான்தான் அதிகமாக உழைத்தேன்.

மேலும், இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் காட்சியை வைத்துதான் தான் ஒரு இயக்குனராக தொடர்கிறார் என்று கிண்டலாக கூறினார். இவரது பேச்சு திரைத்துறையினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்