வடிவேலு அளித்த புகார் – சிக்கலில் இரு நடிகர்

  • In Cinema
  • June 1, 2020
  • 178 Views
வடிவேலு அளித்த புகார் – சிக்கலில் இரு நடிகர்

நடிகர் வடிவேலு நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நகையும் சதையுமாக இருந்த சிங்கமுத்துவும் நடிகர் வடிவேலுவும் நில மோசடி சம்மந்தமான புகாரால் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல ஆரம்பித்தனர். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சிங்கமுத்து மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்ற யுட்யூப் சேனலில் அளித்த பேட்டியில் வடிவேலு சம்மந்தமாக சில கேள்விகளைக் கேட்க அதற்கு பதிலளித்தார் சிங்கமுத்து. அதில் இடம்பெற்ற கருத்து வடிவேலுக்கு பிடிக்காததால் இப்போது இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் ‘நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன் . மேலும் , நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன் . நடிகர் மனோபாலா நடத்தும் ‘ வேஸ்ட் பேப்பர் ‘ என்கிற யூட்யூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க , அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார் .

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார் . இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் . ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் : 13- ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்