புலந்த்ஷாஹர்:
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதனைத்தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.
முசாபர்நகர், பஹ்ரைச், புலந்த்ஷாஹர், கோரக்பூர், பிரோசாபாத் மற்றும் அலிகார் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வன்முறை வெடித்தது.