உத்தரகாண்ட்:
வெள்ள நிவாரண பொருட்களுடன் இன்று உத்தரகாண்ட் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று உத்தரகாஷியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் உத்தரகாஷி மாவட்டத்தில் மோரியிலிருந்து மோல்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பைலட் ராஜ்பால், இணை பைலட் கப்தால் லால் மற்றும் உள்ளூர்வாசியான ரமேஷ் சாவர் ஆகிய 3 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.