புதுடெல்லி:
உத்தரகண்ட்டின் நிதியமைச்சரான பிரகாஷ் பாண்ட் இன்று காலமானார்.
இவர், புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பாண்ட் இன்று காலமானார்.
இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாள் அரசு விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.